NATIONAL

போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேல்- தென் லெபனானில் வீடுகளுக்கு தீவைப்பு

3 ஜனவரி 2025, 2:00 AM
போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேல்- தென் லெபனானில் வீடுகளுக்கு தீவைப்பு

தெஹ்ரான், ஜன. 3 - கடந்தாண்டு  நவம்பர் மாதம் 27ஆம் தேதி  தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் உள்ள வீடுகளைத் தாக்கி தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் (ஐ.ஆர்.என்.ஏ.) தெரிவித்தது.

தெற்கு லெபனானின் பின்ட் ஜெபெல் மாவட்டத்திலுள்ள அய்தாருன் பகுதியில் பல வீடுகளுக்கு இஸ்ரேலியப் படைகள் தீ வைத்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (என்.என்.ஏ.)  கடந்த புதன்கிழமை கூறியது.

2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் பெய்ரூட்டின் புறநகர் பகுதியான டாஹி  மற்றும் லெபனானின் ஐந்தாவது பெரிய நகரமான  டைரின் வான்வெளியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள்  இரண்டாவது முறையாக போர்நிறுத்த உத்தரவை  மீறி பறப்பதை தாங்கள் கண்டதாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பலமுறை மீறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.