NATIONAL

புத்ராஜெயா சிறப்புப் பதிவு எண்களுக்கான (என்பிஐ) விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது - ஜேபிஜே

2 ஜனவரி 2025, 9:26 AM
புத்ராஜெயா சிறப்புப் பதிவு எண்களுக்கான (என்பிஐ) விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது - ஜேபிஜே

புத்ராஜெயா, ஜன 2: இன்று தொடங்கி ஜனவரி 6 ஆம் தேதி வரை புத்ராஜெயா சிறப்புப் பதிவு எண்களுக்கான (என்பிஐ) விண்ணப்பத்தை சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே) திறந்துள்ளது.

JPJeBid அமைப்பு மூலம் விண்ணப்பம் திறக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கை சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறப்பு எண்களின் உரிமைக்கான வாய்ப்புகளையும் திறக்கிறது,” என்று அவர் இன்று புதிய ஜேபிஜே அலுவலகத்தின் தொடக்க விழாவில் பேசும்போது கூறினார்.

புதிய ஜேபிஜே அலுவலகத்தின் திறப்பு அத்துறையின் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாகும்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.