MEDIA STATEMENT

ஜோகூர், கிளந்தானில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 ஜனவரி 2025, 3:12 AM
ஜோகூர், கிளந்தானில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன. 1-  ஜோகூர் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு அதிகரித்தது.

ஜோகூரில் நேற்று  காலை 8.00 மணியளவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேராக இருந்த   வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 17 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேராக    அதிகரித்துள்ளது.

கோத்தா திங்கியில் உள்ள செம்பாட் தேசியப் பள்ளி மற்றும் கம்போங் பெர்பாட் சமூக மண்டபத்தில்  அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி   கூறினார்.

கம்போங் அவாட்டில் உள்ள மூவார் நதி, சிகாமாட் மற்றும் மெர்சிங்கில் உள்ள சுங்கை பாயா டத்தோ நதி ஆகியவை எச்சரிக்கை அளவைப் பதிவு செய்துள்ளன  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிளந்தான்,  பாசிர் மாஸ் மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 31 பேராக அதிகரித்துள்ளது.  நேற்று காலை இந்த எண்ணிக்கை 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேராக இருந்ததாக

சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும்  குவால் தோ'டேவில்  உள்ள நிவாரண மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், பேராக், முவாலிம் மாவட்டத்தில்  நேற்று மாலை 6.00 மணியளவில்  11 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.