NATIONAL

தென் கொரிய விமான விபத்து. விமான நிலையத் தடுப்புச் சுவர், பறவைகள் மோதல் குறித்து கேள்வி

31 டிசம்பர் 2024, 6:25 AM
தென் கொரிய விமான விபத்து. விமான நிலையத் தடுப்புச் சுவர், பறவைகள் மோதல் குறித்து கேள்வி

சியோல், டிச. 31- தென் கொரியாவில் நிகழ்ந்த ஜெஜூ ஏர் விமான

விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண போலீசார்

முயன்று வரும் வேளையில் அந்த விபத்து குறித்து மேலும்

தகவல்களைக் கோரி இறந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு

நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

இன்று வரை அடையாளம் காணப்படாமலிருக்கும் ஐந்து பயணிகளின்

உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. எனப்படும் மரபணு சோதனை

உள்ளிட்ட முயற்சிகளை தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக

அந்நாட்டின் தேசிய காவல் துறை கூறியது.

அதே சமயம், இவ்விபத்து நிகழ்ந்த முவான் விமான நிலையத்தில் ஒன்று

கூடிய இறந்த பயணிகளின் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை

விரைந்து அடையாளம் காணவும் விபத்து குறித்த மேல் விபரங்களைப்

பெறவும் அதிகாரிகளை வலியுறுத்தினர்.

மொத்தம் 175 பேர் பயணித்த அந்த ஜெஜூ ஏர் போயிங் 737-800 ரக

விமானம் சக்கரங்கள் செயல்படாத நிலையில் தரையோடு உரசியபடி

தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத் தடுப்புச்

சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் இரு விமானப்

பணியாளர்கள் மட்டுமே உயிர்த்தப்பினர்.

இந்த கோர விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தென் கொரிய

விசாரணையாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்

நாட்டிலுள்ள அனைத்து விமான செயல்பாடுகள் மீது விரிவான பாதுகாப்பு

ஆய்வினை மேற்கொள்ளும்படி தென் கொரியாவின் இடைக்கால அதிபர்

சோய் சாங்-மோக் வலியுறுத்தியுள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியின் முக்கிய

பாகங்கள் காணாமல் போன நிலையில் அதிலுள்ள தரவுகளை மீட்பது

குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சவுத் கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் அனைத்து போயிங்

737 ரக விமானங்களையும் ஆய்வு செய்யும் பணி வரும் ஜனவரி 3ஆம்

தேதி முற்றுப் பெறும் என்றும் அந்த விமான நிலையம் 7ஆம் தேதி வரை

தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.