NATIONAL

இன்று இரவு புத்தாண்டுக்கான பிரதமரின் சிறப்புரை

31 டிசம்பர் 2024, 2:08 AM
இன்று இரவு புத்தாண்டுக்கான பிரதமரின் சிறப்புரை

கோலாலம்பூர்,டிச 31: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது புத்தாண்டு சிறப்பு உரையை இன்று இரவு 9 மணிக்கு ஆற்றுவார். பொதுமக்கள் அதை அனைத்து உள்ளூர் மற்றும் சமூக ஊடக தளங்களில் காணலாம்.

"2025 ஆம் ஆண்டிற்கான நாட்டின் இலக்குகள் மற்றும் திசையை கோடிட்டுக் காட்டுவதுடன், இந்த ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தி புத்தாண்டு செய்தியை இன்று வழங்குவேன் என பிரதமர் அறிவித்தார்.

"இந்த திட்டமிட்ட முயற்சியும் சேவையும் மக்களையும் நாட்டையும் நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்," என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.