NATIONAL

மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மடாணி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்

27 டிசம்பர் 2024, 3:43 AM
மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மடாணி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்

கோலாலம்பூர், டிச 27: மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மடாணி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என எவரும் ஓரங்கட்டப்படாமல் இருக்க அரசு துல்லியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

"வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது மடாணி அரசாங்கத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

"ஒவ்வொரு அடியும் மக்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள மற்றும் கண்ணியமான வாழ்க்கையை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு எடுக்கப்படுகிறது" என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை உயர்த்தும் பல முயற்சிகளை மடாணி அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என பிரதமர் தெரிவித்தார். அவற்றில் துனாய் ராஹ்மா திட்டத்தின் (STR) மூலம் ஒன்பது மில்லியன் B40 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.