ஜாசின், டிச 26: இன்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) கிலோமீட்டர் 186.7 இல் வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று சாலைத் தடுப்பில் மோதியதில் இரண்டு பொது பல்கலைக்கழக மாணவர்கள் இறந்தனர்.
காலை 6.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 19 வயதுடைய நூர்ஹானிஸ் அஃப்ரினா அஜிசான் மற்றும் நூர்ஹானிஸ் அஃப்ரினா அஜிசான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஹ்மட் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.
"ஜோகூரிலிருந்து மலாக்கா நோக்கிச் சென்ற கார் உலோக சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால், இதில் மற்ற வாகனங்கள் ஏதும் சம்பந்தப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஓட்டுநர் நூர் ஹனிஸ் சுரயா சுபியான் (19) மற்றும் மற்றொரு பயணியான அஸ்வாலிடியா அஸ்மான் (21) ஆகியோர் காயமடைந்ததாக அஹ்மட் ஜமீல் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.
– பெர்னாமா








