MEDIA STATEMENT

ரவுப் மற்றும் கோல லிப்பிசில்  மீண்டும் வெள்ளம்

25 டிசம்பர் 2024, 12:19 PM
ரவுப் மற்றும் கோல லிப்பிசில்  மீண்டும் வெள்ளம்

குவாந்தான், டிசம் 25;-  ரவுப் மற்றும் கோல லிப்பீசை வெள்ளம் மீண்டும் தாக்கியுள்ளது, நேற்று முதல் தொடர்ச்சியான மழையைத் தொடர்ந்து  இவ்விரு  மாவட்டங்களிலும் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பாதிக்கப் பட்டவர்கள் மூன்று தற்காலிக தங்கும் மையங்களுக்கு (பிபிஎஸ்) மாற்றப் பட்டனர்.

லிப்பிஸ் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜே.பி.பி.டி) செயலகம், கம்போங் பிலாத்தேக்  மற்றும் லுபோக் ஸ்கிம் ஆகிய கம்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை  தற்காலிக தங்கு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

"லிபிஸில் ஏற்பட்ட வெள்ளம் ரவுபில் இருந்து லிபிஸில் ஆறுகளில் நிரம்பி வழிந்ததால் வெள்ளம் ஏற்பட்டது, இதன் விளைவாக பல வீடுகள் இடுப்பு  அளவு வரை நீரில் மூழ்கின".

"ஏழு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 18 பாதிக்கப் பட்டவர்கள் பிலாத்தேக்  கிராம மசூதி மற்றும் லுபோக் ஸ்கிம் தேசிய பள்ளி ஆகிய இரண்டு பி.பி.எஸ். களில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று ஜே.பி.பி.டி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (ஜே. பி. எஸ்) வெள்ள தகவல் இணையதளத்தில் படி மாநிலத்தில் உள்ள ஐந்து ஆறுகள், அதாவது ஜெத்தி லிப்பிஸில் உள்ள ஜெலாய் நதி, ஜெராம் புங்கோர் மற்றும் ஜெலாஜ் நதி கோலா மெடாங்கில், கோலா க்ரோவில் உள்ள சுங்கை பகாங்,; மற்றும் ரவுப், கம்போங் பெருவாஸில் உள்ள டோங் நதி ஆகியவை எச்சரிக்கை நிலையில் உள்ளன என்பதைக் காட்டுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.