NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டு வருட நிர்வாகம் தொடர்பாக சிலாங்கூர் டிவியில் விவாதம்  

20 டிசம்பர் 2024, 3:29 AM
ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டு வருட நிர்வாகம் தொடர்பாக சிலாங்கூர் டிவியில் விவாதம்  

ஷா ஆலம், டிச 20: டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டு வருட நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மதிப்புரையை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வழங்குவார்.

இந்த நேர்காணலில் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் இல்ஹாம் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹிசோம்முடின் பாக்கர் ஆகியோர் பங்கேற்பர். இந்த நிகழ்வு தேசிய பத்திரிகையாளர் டான்ஸ்ரீ ஜோஹன் ஜாஃப்பார் அவர்களால்  நடத்தப்படுகிறது.

சிலாங்கூர் மீடியா ஏற்பாடு செய்துள்ள சேம்பாங் மாலாம் நிகழ்ச்சியில், அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான சில சூடான விஷயங்கள் விவாதிக்கப்படும்.

டிசம்பர் 23 அன்று இரவு 9 மணிக்கு மீடியா சிலாங்கூரின் முகநூல் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவியில் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.