NATIONAL

சியோலுக்கு மோசடி சுற்றுலா பேக்கேஜ் விவகாரத்தை Motac தொடர்ந்து கண்காணிக்கும்

19 டிசம்பர் 2024, 9:35 AM
சியோலுக்கு மோசடி சுற்றுலா பேக்கேஜ் விவகாரத்தை Motac தொடர்ந்து கண்காணிக்கும்

புத்ராஜெயா,டிச 19: சமூக ஊடகங்கள் மற்றும் சியோல், தென் கொரியாவில் வசிக்கும் தொழில் முனைவோருக்கு பாதிப்பை விளைவிக்கும் உரிமம் பெறாத  சுற்றுலா நிறுவனங்களால் ஏமாற்றப்படும் மோசடி விவகாரத்தை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (Motac) தொடர்ந்து கண்காணிக்கும்.

சுற்றுலாத் தொழில் சட்டம் 1992 (சட்டம் 482)-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் https://www.motac.spab.gov என்ற இணைப்பில் விசாரணைக்கு உதவ காவல்துறையில் புகார் அளிக்குமாறும் வலியுறுத்தப் படுகின்றனர் என Motac வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாமல் சுற்றுலா நிறுவனங்களை இயக்கும் நபர்களுக்கு RM500,000க்கு மிகாமல் அபராதம் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

https:/www.motac.govmy/semakan/tobtab .என்ற இணையதளத்தில் உரிமம் பெற்ற ஏஜென்சிகளின் பட்டியலை பெறலாம். "தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க, உரிமம் பெற்ற பயண முகவர் நிறுவனங்களிடமிருந்து டூர் பேக்கேஜ்களை வாங்க பொதுமக்களுக்கு MOTAC அடிக்கடி அறிவுறுத்துகிறது.

பொதுமக்கள் அமைச்சகத்தின் அறிவிப்பைப் பற்றி தெரிந்து கொண்டு எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், ஏஜென்சி வழங்கும் பேக்கேஜை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் மூலம், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, மோசடி வழக்குகள் தவிர்க்கப்படுகின்றன.

தொழிலதிபர் ஒருவர் சியோலுக்கு செல்வதற்காக வழங்கிய மோசடி சுற்றுலாப் பேக்கேஜ்யால் பாதிக்கப் பட்டதாகக் காவல்துறைக்கு ஐந்து புகார்கள் கிடைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.