NATIONAL

இடைநிலைப் பள்ளி வரையிலான கல்வியை கட்டாயமாக்குவது குறித்து பிப்ரவரி 2025 விவாதிக்கப்படும்

19 டிசம்பர் 2024, 7:57 AM
இடைநிலைப் பள்ளி வரையிலான கல்வியை கட்டாயமாக்குவது குறித்து பிப்ரவரி 2025 விவாதிக்கப்படும்

புத்ராஜெயா, டிச 19: இடைநிலைப் பள்ளி வரையிலான கல்வியை கட்டாயமாக்குவதற்காக கல்விச் சட்டம் 1996 ஐ திருத்துவதற்கான மசோதா (RUU) பிப்ரவரி 2025 இல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் நாட்டின் சட்டத்துறை வழக்கறிஞர் அலுவலகம் (ஏஜிசி) மட்டத்திலும் பரிசீலனை செய்யப்பட்டுஉள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.

"எங்களிடம் ஏற்கனவே ஆரம்பப் பள்ளிக் கல்விக் கொள்கை உள்ளது, அந்தக் கொள்கையின் மூலம் நாங்கள் 98 முதல் 99 சதவிகிதம் வரையிலான மிக உயர்ந்த மாணவர் சேர்க்கையை அடைகிறோம்.

"மேலும் இந்த கட்டாய இடைநிலைப் பள்ளிக் கல்விக் கொள்கையானது, இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் பிரச்சனை இல்லை என்பதை உறுதிசெய்வதற்கான எங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும்" என்று அவர் இன்று கல்வி அமைச்சின் மாதாந்திர சபையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் அவர்களின் மாறுபட்ட பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வியை அணுகுவதை உறுதிசெய்யும் முயற்சியில், ஆரம்பநிலை முதல் இடைநிலை வரை கல்வியை கட்டாயமாக்குவதற்கான வரைவு மசோதாவை AGC மறுஆய்வு செய்து வருவதாக டிசம்பர் 4 அன்று தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.