NATIONAL

2025 வரவு செலவுத் திட்ட மசோதா மக்களவையில் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது

4 டிசம்பர் 2024, 2:04 AM
2025 வரவு செலவுத் திட்ட மசோதா மக்களவையில் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர், டிச. 4- மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2025

விநியோக மசோதா 2025 (வரவு செலவுத் திட்டம்) குரல் வாக்கெடுப்பின்

மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று

நிறைவேற்றப்பட்டது.

நேற்று மக்களவைக்கு தற்காலிகமாக தலைமையேற்ற பாயா பெசார்

தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா

இதனை அறிவித்தார்.

பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதம் மற்றும் நவம்பர் 13ஆம் தேதி

தொடங்கி நடைபெற்ற அமைச்சுகளுக்கான செயல்குழு ரீதியான

விவாதங்களை முடித்து வைக்கும் அங்கம் ஆகிய நடைமுறைகளுக்குப்

பின்னர் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, 2025 வரவு செலவுத் திட்டத்தை மூன்றாம் வாசிப்புக்காக

இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் தாக்கல்

செய்தார்.

இந்த 2025 வரவு செலவுத் திட்டத்தை மக்களவை கடந்த நவம்பர் 12ஆம்

தேதி கொள்கை ரீதியாக நிறைவேற்றியது. முன்னதாக இந்த மசோதா மீது

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் விவாதமும் நவம்பர் 6ஆம் தேதி

தொடங்கி நான்கு நாட்களுக்கு விவாதத்தை முடித்து வைக்கும் அங்கமும்

இடம் பெற்றன.

மொத்தம் 42,100 கோடி வெள்ளி மதிப்பிலான 2025 வரவு செலவுத்

திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர்

18ஆம் தேதி தாக்கல் செய்தார். நாட்டின் வரலாற்றில் அதிகத் தொகையை

உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டமாக இது விளங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.