ANTARABANGSA

கோல திரங்கானுவில் வெள்ளம் மோசமடைகிறது- துயர் துடைப்பு மையங்களுக்கு பிரதமர் வருகை

1 டிசம்பர் 2024, 6:24 AM
கோல திரங்கானுவில் வெள்ளம் மோசமடைகிறது- துயர் துடைப்பு மையங்களுக்கு பிரதமர் வருகை

கோல திரங்கானு, டிச.1- மாநிலத்தில் மோசமாகி வரும் வெள்ளப் பேரிடர் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்கும்  பேரிடரில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கும்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை கோல திரங்கானு வந்தடைந்தார்.

காலை 10.25 மணிக்கு சுல்தான் மாமுட் அனைத்துலக  விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை மந்திரி  பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் வரவேற்றார்.

பின்னர் பிரதமர் தெலாகா பாப்பான் தேசிய பள்ளியில் உள்ள துயர் துடைப்பு மையத்தை பார்வையிட்டார். அதன் பிறகு செத்தியூ, மங்கோக் தேசிய பள்ளியின் நிவாரண மையத்திற்கு அவர் வருகை புரிந்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட் திரங்கானு மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள  305 நிவாரண மையங்களில்   11,679 குடும்பங்களை சேர்ந்த  43,281 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு 41,409 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.

மாநில பேரிடர் மேலாண்மை செயல்  குழு செயலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி பெசூட் மாவட்டத்தில்  அதிகபட்சமாக 16,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து உலு  திரங்கானு (7,080 பேர்), டுங்குன் (6,470 பேர்), செத்தியூ (6,332 பேர்), கோல திரங்கானு (2,940 பேர்), கோல நெருஸ் (2,307 பேர்), கெமமான் (1,230 பேர்) மற்றும் மாராங் (775 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.