ஷா ஆலம், நவ. 29: இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உணவு வழங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை தற்காலிக தங்கும் மையத்திற்கு (பிபிஎஸ்) செல்லுமாறு மரியம் அப்துல் ரஷீட் அறிவுறுத்தினார்.
"வெள்ளம் மோசமாகி, ஷார்ட் சர்க்யூட் சம்பவமாகிவிடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். அதனால், அவர்களை சுங்கை பிஞ்சாய், மேருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிபிஎஸ்ஸுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினேன் என்றார்.
"வெள்ளம் குறையும் வரை குடியிருப்பாளர்கள் பொறுமையாக பிபிஎஸ்யில் தங்கி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையை தொடர்பு கொண்டு தண்ணீரை வெளியேற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையத்தின் படி, 39 குடும்பங்களைச் சேர்ந்த 159 பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இடமளிக்க இரண்டு பிபிஎஸ் திறக்கப்பட்டது.


