NATIONAL

கஞ்சா வகை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

28 நவம்பர் 2024, 5:11 AM
கஞ்சா வகை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

கோலாலம்பூர்,நவ 28: பெட்டாலிங் ஜெயா வில் உள்ள டாமன்சாரா டாமாய் பகுதியில் கஞ்சா வகை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய சந்தேக நபர் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) உறுப்பினர்கள் குழுவால் நேற்று மாலை 6.45 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாபார் கூறினார்,

சோதனையின் முடிவில், 0.21 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அதன் மதிப்பு ரிங்கிட் 6,300 என்றும் அவர் கூறினார்.

"முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. சந்தேக நபர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் மற்றும் இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை.

இன்று முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117ஆவது பிரிவின் கீழ் சந்தேக நபரை விளக்கமறியலில் தடுத்து வைக்க பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால், அதை அருகிலுள்ள ஏதேனும் நிலையத்தில் தெரிவிக்கவும் அல்லது IPD பெட்டாலிங் ஜெயா செயல்பாட்டு அறை ஹாட்லைன் 03-7966 2267 இல் நேரடியாக தொடர்பு கொள்ளவும் என ஷாருல்நிசாம் அறிவுறுத்தினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.