NATIONAL

செயற்கை நுண்ணறிவு (AI) துறையினை சிறந்த முறையில்  உபயோகிக்க மனித வள மேம்பாட்டு தேவை

25 நவம்பர் 2024, 5:06 AM
செயற்கை நுண்ணறிவு (AI) துறையினை சிறந்த முறையில்  உபயோகிக்க மனித வள மேம்பாட்டு தேவை

கோலா சிலாங்கூர், நவ 25: மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையை மேம்படுத்துவதற்கான நமது விருப்பத்தை நிறைவேற்ற ஆற்றல் மிக்க மனித வளத்தை தயார் செய்ய சிலாங்கூர் தொழில் நுட்ப திறன் பயிற்சி மேம்பாட்டு மையம் (STDC) பங்களிக்கவுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பக் கல்வி மூலம் AI பாடங்களை எஸ் டி டி சி வழங்கி வருகிறது என அதன் தலைமை செயல் அதிகாரி முகமட் ரமாலி அபு பக்கர் கூறினார்.

"கடந்த ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பப் படிப்பில் AI பாடத்தை கூடுதல் பாடமாக வழங்கினோம். இப்போது அதில் சுமார் 200 திறமையான மாணவர்கள் உள்ளனர்.

"மாநில அரசு திட்டமிட்டபடி சிலாங்கூரில் AI துறையை மேம்படுத்த இந்த நபர்கள் மனித வளமாகத் தயார் செய்யப் படுவார்கள்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், AI துறையை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கத்தின் முன்மொழிவை முகமட் ரமாலி பாராட்டினார், மேலும் இந்த நடவடிக்கை நீண்ட கால நன்மைகளை வழங்கக்கூடும் என்று விவரித்தார்.

"இது ஒரு நல்ல முயற்சியாகும்.ஏனெனில், AI கல்வித் துறையில் ஒரு இடத்தை வகிக்கிறது, குறிப்பாக உலக அளவில் AI சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மாநில பட்ஜெட் 2025 இல், AI இன்குபேட்டர் மையம் மற்றும் AI ட்ரெயின் பிளேசர்ஸ் ஆகியவற்றின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை நனவாக்க சிலாங்கூர் RM 5 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்குகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மேலும், சிலாங்கூர் அரசு அடுத்த ஆண்டு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய AI வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.