NATIONAL

செயற்கை நுண்ணறிவு (AI) முறை  மூலம் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப  திட்டம்

20 நவம்பர் 2024, 8:45 AM
செயற்கை நுண்ணறிவு (AI) முறை  மூலம் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப  திட்டம்

ஷா ஆலம், நவ 20: செயற்கை நுண்ணறிவு (AI) முறை மூலம் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை மாநில அரசு ஆயர் சிலாங்கூருடன் இணைந்து ஆராய்ந்து வருகிறது.

சிலாங்கூரில் உள்ள 34 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன், நதிகளில் இருந்து வரும் மூல நீர் ஆதாரங்களின் தரத்தை கண்காணித்து, கண்டறிவதே அத்தொழில்நுட்பம் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

"வெள்ளம் மற்றும் நீரின் தரத்தை முன்கூட்டியே எச்சரிக்க, நீர் நிலை கண்டறிதலைக் கட்டுப்படுத்த உதவும் மேம்பட்ட பகுப்பாய்வு முறைகள் மற்றும் ரிமோட் சென்சார்கள் உள்ளிட்ட AI இன் பயன்பாட்டிற்கு மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளது.

"இந்த AI முறை நீர் பயன்பாட்டைச் சேமிக்கும், செலவுகளைக் குறைக்கும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் என்று மாநிலம் நம்புகிறது," என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில், நீர்மட்டத்தைக் கண்டறிதல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த AIயின் முன்மொழியப்பட்ட பயன்பாடு குறித்து செமினி சட்டமன்ற உறுப்பினர் நூசி மாவுட்சின் கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.