NATIONAL

துணை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களால் சமூகப் பொறுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

19 நவம்பர் 2024, 9:58 AM
துணை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களால் சமூகப் பொறுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ 19: மாநிலத்தின் புதிய வருவாயின் ஒரு பகுதியாக துணை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களால் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இது கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில அரசு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 40 மில்லியன் ரிங்கிட் கிடைக்கும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வருவாயின் ஒரு பகுதி எம்பிஐ இடமிருந்தும் (ரிம 30.3 மில்லியன்) மற்றும் சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்திலிருந்தும் (ரிம 10 மில்லியன்) பெறப்பட்டது என்று அவர் விளக்கினார்.

அவற்றில் பெர்படானன் கெமாஜுவான் பெர்தானியன் சிலாங்கூர் மற்றும் வோல்வையிட்

ஹோல்டிங்ஸ் ஆகியவை முறையே RM2.15 மில்லியன் மற்றும் RM2.03 மில்லியன் பங்களிக்கின்றன.

வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் எஹ்சான் ரஹ்மா விற்பனைக்கும், ஐடிலாடா முன்னிட்டு பலி

கொடுப்பதற்காக பசுக்கள் மற்றும் ஆடுகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

சிலாங்கூர் இதுவரை RM2.4 பில்லியனை வசூலித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் RM2.2 பில்லியனாக இருந்த இலக்கை அடைய நேர்மறையான பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் தீவிர முதலீடுகள் காரணமாக இருந்தது.

நல்ல செயல் திறனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு RM2.35 பில்லியன் வருவாய் ஈட்ட மாநில நிர்வாகம் இலக்கு வைத்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.