ANTARABANGSA

இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் படுகொலைகள் நடத்தி வருகிறது

14 அக்டோபர் 2024, 8:44 AM
இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் படுகொலைகள் நடத்தி வருகிறது

நியூயார்க், அக் 14: இஸ்ரேல் ராணுவம் தற்போது ஜபாலியா, வடக்கு காசா பகுதியில் தொடர் படுகொலைகளை நடத்தி வருகிறது என 1967ஆம்  ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள்  நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரான பிரான்செஸ்கா அல்பனீஸ் கூறினார்.

ஜபாலியாவில் மக்கள் குழுக்களாகவோ அல்லது தனித்தனியாகவோ,  கற்பனை செய்ய முடியாத கொடூரமான செயலால் கொல்லப்பட்டதாக அவர்  விளக்கினார்.

மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி, அந்நாடுகளின் ஆதரவுடன்,  இனப்படுகொலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னார்வக் கொலையாளிகளை  இருக்க ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய குடிமக்களால் இந்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக  அவர் குற்றம் சாட்டினார்.

– பெர்னாமா-வாஃபா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.