ANTARABANGSA

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்

2 அக்டோபர் 2024, 6:37 AM
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்

பெய்ரூட், அக் 2: கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய

வான்வழித் தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 156 பேர்

காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பால்பெக்-ஹெர்மல் மாவட்டத்தில் 11 பேரும், நபாட்டி நிர்வாகப் பகுதியில் 22 பேரும்,

பெய்ரூட் மற்றும் மவுண்ட் லெபனானில் தலா மூன்று பேரும் மற்றும் தெற்கு நிர்வாகப்

பகுதியில் 16 பேரும் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23 முதல், இஸ்ரேலிய ராணுவம் லெபனான் மீது தீவிர வான்வழித்

தாக்குதலை நடத்தியது.

அக்டோபர் 8, 2023 முதல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் காசா

பகுதியில் தொடர்வதால், ஒரு பரந்த மோதலுக்கான அச்சத்தின் மத்தியில்,

ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலிய இராணுவமும் லெபனான்-இஸ்ரேல் எல்லையில்

தாக்குதல்களை நடத்துகின்றன.

– பெர்னாமா-சின்ஹுவா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.