ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 41,000 பேராக அதிகரிப்பு- சுமார் 100,000 பேர் காயம்

16 செப்டெம்பர் 2024, 3:57 AM
இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 41,000 பேராக அதிகரிப்பு- சுமார் 100,000 பேர் காயம்

காஸா, செப். 16- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41,206 பேராக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியானதோடு மேலும் 57 பேர் காயமுற்றதாக அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

இந்த புதிய மரண எண்ணிக்கையுடன் சேர்த்து இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 41,206 பேராக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் போரில் 95,337 பேர் காயமுற்றுள்ளதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.