ANTARABANGSA

காசாவில் உள்ள 85 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டனர்

31 ஜூலை 2024, 5:51 AM
காசாவில் உள்ள 85 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டனர்

ஜெனீவா, ஜூலை 31: காசா பகுதியில் தீவிர நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த 85   நோயாளிகள் பெரிய அளவிலான கூட்டு அறுவை சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை   அபுதாபிக்கு மாற்றப்பட்டதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் அரசு மற்றும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து உலக சுகாதார  அமைப்பின் (WHO) உதவியுடன், அக்டோபர் 2023 க்குப் பிறகு இதுபோன்ற மிகப்பெரிய

வெளியேற்ற நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

35 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்கள் அடங்கிய 85 நோயாளிகள், காசாவில் இருந்து   கேரிம் சலோம் வழியாக இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்திற்கு

மாற்றப்பட்டனர்.

காசாவில் இருந்து நோயாளிகளை வெளியேற்றி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு கிழக்கு மத்தியதரைக் கடலுக்கான உலக சுகாதார

அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஹனன் பால்கி தனது நன்றியை தெரிவித்தார்.

– பெர்னாமா-சின்ஹுவா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.