ANTARABANGSA

பாரிஸ் ஒலிம்பிக்- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 4வது நாளில் மலேசியாவுக்கு இன்ப அதிர்ச்சி

31 ஜூலை 2024, 5:17 AM
பாரிஸ் ஒலிம்பிக்- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 4வது நாளில் மலேசியாவுக்கு இன்ப அதிர்ச்சி
பாரிஸ் ஒலிம்பிக்- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 4வது நாளில் மலேசியாவுக்கு இன்ப அதிர்ச்சி

பாரிஸ், ஜூலை 31 பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 4வது நாளான நேற்று  பிரிட்டன்  மேலும் 2 தங்கப்பதக்கங்களை பெற்று  பதக்க பட்டியலில் முன்னேறிய வேளையில் , ஜப்பான்  , சீனா, அமெரிக்கா போன்ற விளையாட்டு ஜாம்பவான்கள்  தலா 1 தங்கப்பதக்கத்தை மட்டும் பெற முடிந்தது.

மலேசியர்கள்  பொறுத்தமட்டில்  நேற்று  ஒரு  மகத்தான நாள் என்றே கூற வேண்டும், பேர்லி தான் – மு.தீனா ஜோடி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து விளையாட்டுக்கான குழு நிலை  இறுதி  ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை பூப்பந்து இரட்டையர்களான இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சித்தி ஃபாடியா சில்வா ராமதாந்தியை தங்களின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தோற்கடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

 

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.