பாங்காக், மே 26 - கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 43 பேர் அவசர நிலைக்குப் பிறகு நான்கு நாட்களுக்கு பிறகும் பாங்காக்கில் மருத்துவமனையில் இருப்பதாக தாய்லாந்து தலைநகரில் உள்ள மருத்துவமனை ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.
43 நோயாளிகள் பாங்காக்கில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர் என்று சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
34 நோயாளிகள் இருக்கும் சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையில், ஏழு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் - மூன்று ஆஸ்திரேலியர்கள், இரண்டு மலேசியர்கள், ஒரு பிரிட்டிஷ் மற்றும் ஒரு நியூசிலாந்துகாரர்.
மற்றொரு மருத்துவமனையில் இருந்து மற்ற 27 விமான பயனி நோயாளிகளில் எட்டு பிரிட்டிஷ், ஆறு ஆஸ்திரேலியர்கள், ஐந்து மலேசியர்கள் மற்றும் இரண்டு பிலிப்பைன்ஸ் குடிமக்களும் அடங்குவர்.
சமிதிவேஜ் ஸ்ரீநாகரினிலிருந்து இருவர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர், அதே சமயம் சமிதிவேஜ் சுகும்விட் மருத்துவமனையில் இருந்து இருவர் சமிதிவேஜ் ஸ்ரீனாகரினுக்கு மாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினர்களுடன் இணைந்தனர்.
வியாழன் அன்று (மே 23), சாமிடிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனை இயக்குநர் செய்தியாளர்களிடம், 22 நோயாளிகளுக்கு முதுகுத் தண்டு காயங்கள் இருப்பதாகவும், ஆறு பேருக்கு மூளை மற்றும் மண்டையில் காயங்கள் இருப்பதாகவும், ஆனால் எவருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினார்.
சிங்கப்பூர் ஏர்லைன் விமானம் SQ 321 செவ்வாய்க்கிழமை (மே 21) அன்று, லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மியான்மர் மீது பறக்கும் போது திடீரென, தீவிர கொந்தளிப்பை எதிர் கொண்டதில், ஒரு பயணி மாரடைப்பால் இறந்தார் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் விமானம் அவசர தரையிறக்கத்திற்காக பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது.
- ராய்ட்டர்ஸ்








