ECONOMY

சிமிஞ்சேயில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்காலிக பாலம் 

15 மே 2024, 5:26 AM
சிமிஞ்சேயில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்காலிக பாலம் 

ஷா ஆலம், மே 15: ஜாலான் சுங்கை லாலாங், செமிஞ்சேயில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிக பாலம் (பெய்லி பாலம்) கட்டுவதவதற்கு  மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பொதுப்பணித் துறை, காஜாங் நகராண்மை கழகம் மற்றும் பல நிறுவனங்களுடன் இணைந்து புதிய பாலத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டும் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.

 

"தற்போதைய நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, இங்குள்ள சாலையைப் பயன்படுத்துவோர் கவனமாகவும், எப்போதும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நேற்று ட்விட்டரில் தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.