ANTARABANGSA

தோக்கியோ விமான விபத்து- 300க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து

3 ஜனவரி 2024, 8:20 AM
தோக்கியோ விமான விபத்து- 300க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து

தோக்கியோ, ஜன 3 - இங்குள்ள ஹனேடா விமான நிலையத்தில் நேற்று

நிகழ்ந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் ஜப்பான்

கடலோர காவல்படை விமானம் சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக பல

விமான நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்ட பயணச் சேவைகளை ரத்து

செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக அந்த விமான நிலையத்தின் பல ஓடுபாதைகள்

நேற்று மாலை தொடங்கி பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டன. இதன்

காரணமாக ஹனேடாவிலிருந்து புறப்பட வேண்டிய 226 விமானச்

சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் 40,000க்கும் மேற்பட்ட பயணிகள்

பெரும் அவதிக்குள்ளாயினர்.

மூன்று ஓடுபாதைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் சுமார் 100 விமான

சேவைகள் இன்னும் தடைபட்டுள்ளதோடு 19,000 பேர் பயணத்தை தொடர

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஷின்ஹூவா செய்தி நிறுவனம்

கூறியது.

நியு சித்தோஷே மாநிலத்திலிருந்து 367 பயணிகளுடன் ஹனேடா விமான

நிலையம் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-350 ரக

விமானம் ஜப்பான் கடலோரக் காவல்படையின் போம்பர்டியர் டேஷ்-8 ரக

விமானத்துடன் மோதியது. இந்த விபத்தில் இரு விமானங்களும் தீயில்

முழுமையாகச் சேதமடைந்தன.

கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு

உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கடலோர காவல்படையின்

விமானத்தில் இருந்த ஐந்து பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததோடு அதன்

விமானி கடுமையான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.