ANTARABANGSA

பாலஸ்தீன-இஸ்ரேல் போர் மூண்டது முதல் 61 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர்

3 டிசம்பர் 2023, 2:46 AM
பாலஸ்தீன-இஸ்ரேல் போர் மூண்டது முதல் 61 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளனர்

மாஸ்கோ, டிச 3-  பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் வெடித்த அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு  கொல்லப்பட்ட  பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 61 பேரை எட்டியுள்ளது என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (சி.பி.ஜே.) அறிக்கையை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி  போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 16,000 பேரில் குறைந்தது 61 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களும் அடங்குவர் என்று  சி.பி.ஜே. வெளியிட்ட முதல் கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி மட்டும் 6 பத்திரிகையாளர்கள் இறந்தனர், நவம்பர் 18 ஆம் தேதி 5 பேர் கொல்லப்பட்டனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.