ANTARABANGSA

கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்

21 நவம்பர் 2023, 7:35 AM
கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்

டோஹா, நவ 21: கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்தில் அவசர உதவிக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

கட்டாரில் ஆசிய கோப்பை டிக்கெட் விற்பனை யின் வருமானத்தை பாலஸ்தீனத்திற்கு வழங்க தனது தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆசிய கோப்பை-கத்தார் 2023 இன் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹமாத் பின் கலிஃபா அல் தானி கூறினார்.

"இந்த கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முயற்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் மிகவும் கடினமான காலங்களில் மக்களுக்கு ஆதரவு வழங்கும் முறையாக கால்பந்து அதன் பங்கை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்" என பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்துள்ளது.

2023 AFC ஆசிய கோப்பை கத்தார் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10, 2024 வரை நடைபெற உள்ளது.

– பெர்னாமா-வாஃபா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.