NATIONAL

மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்திற்காகத் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மூன்று மாதம் சிறை

25 செப்டெம்பர் 2023, 11:26 AM
மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்திற்காகத் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மூன்று மாதம் சிறை

கோலாலம்பூர், செப் 25: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மாமியாரைக் காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

புத்ரா அஜீருல் அப்துல் அஜீஸ் (32) என்பவருக்கு எதிரான அத்தண்டனையை இன்று முதல் அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஷஹாருடின் உத்தரவிட்டார்.

வாங்சா மஜூவிலுள்ள தாமான் மெலாட்டி தீயணைப்பு நிலைய குடியிருப்பில் 27 டிசம்பர் 2021 அன்று மாலை 4 மணி அளவில் ஐனி அகமட் (58) என்பவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டப் பிரிவு 323ன் கீழ் குற்றச்சாட்டு உள்ளது.

பொதுநலக் காரணியைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பாடம் கற்பிக்க கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் ஷெரின் யோங் ஷி யீ கேட்டுக் கொண்டார்.

எனது அனுமதியின்றி என் மாமியார் எனது மனைவியை மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வர விரும்பியதால் நான் அப்படி நடந்து கொண்டேன். எனவே நான் குறைந்தபட்சத் தண்டனையைக் கேட்கிறேன்," என்று புத்ரா அஜீருல் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.