NATIONAL

30,893 மாணவர்களுக்குக் கடன் முன்பணமாக (WPP) வழங்கப்படும் - தேசிய உயர்கல்வி நிதிக் கழகம்

25 செப்டெம்பர் 2023, 8:10 AM
30,893 மாணவர்களுக்குக் கடன் முன்பணமாக (WPP) வழங்கப்படும் - தேசிய உயர்கல்வி நிதிக் கழகம்

கோலாலம்பூர், செப் 25 - இந்த ஆண்டு அக்டோபர் சேர்க்கைக்கான பொது உயர் கல்வி நிறுவனங்களில் முதல் இளங்கலை பட்டப்படிப்பு தொடரும் மொத்தம் 30,893 மாணவர்களுக்கு RM46.34 மில்லியன், கடன் முன்பணமாக (WPP) வழங்கப்படும்.

மாணவர்களுக்குத் தலா RM1,500 கடன் முன்பணமாக வழங்கப்படும் என தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) தலைவர் டத்தோ நோர்லிசா அப்துல் ரஹீம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரஹ்மா பணப் பங்களிப்பை (STR) பெற்ற பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் பிள்ளைகள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். நிதிப் பிரச்சனைகள் எந்தவொரு மாணவரும் தங்கள் படிப்பைத் தொடர்வதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அவர் கூறினார். .

"இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிதிச் சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் அனைவரும் தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

மாணவர்கள் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் இந்த உதவி திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதைச் சரிபார்க்கலாம் மற்றும் தகுதியுடையவர்கள் செப்டம்பர் 19 மற்றும் நவம்பர் 18, 2023 க்கு இடையில் நாடு முழுவதும் உள்ள ``Bank Islam Malaysia Berhad (BIMB)`` கவுன்டர்களில் முன்பணத்தைப் பெறலாம்.

மாணவர்கள் முன்பணத்தைப் பெற் BIMB கவுன்டர்களில் ஆஃபர் லெட்டர் மற்றும் மாணவர் அட்டையைக் காட்ட வேண்டும்.

இத்திட்டம் மற்றும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடன்கள் பற்றிய கூடுதல் தகவல்களை www.ptptn.gov.my மற்றும் myPTPTN மூலமாகப் பெறலாம்

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.