புத்ராஜெயா, செப்டம்பர் 21: புகைபிடிக்கும் குற்றங்களுக்காக சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த மாதம் முழுவதும் RM1.203 மில்லியன் மதிப்புள்ள மொத்தம் 4,884 அபராதங்களை வெளியிட்டது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2023 க்கான பொது சுகாதார சட்டத்தின் கீழ் அமலாக்கம் மற்றும் சட்டத்தின் சாதனை குறித்து இன்றைய அறிக்கையில், 22,204 வளாகங்களை உள்ளடக்கிய மொத்தம் 9,230 குற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
டிங்கி காய்ச்சலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நோய் பரப்பும் பூச்சி கொல்லி சட்டம் (APSPP) 1975 கீழ் அமலாக்கம் குறித்து டாக்டர் முஹம்மது ராட்ஸி கூறுகையில், ஒரு அபராதத்திற்கு சராசரியாக RM500 வீதம் என்று RM1.59 மில்லியன் மதிப்புள்ள மொத்தம் 3,188 அபராதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
நீதிமன்ற நடவடிக்கைக்காக மொத்தம் 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 93 வழக்குகள் நீதிமன்றத்தில் தண்டக்கப்பட்டு மொத்தம் RM353,280 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
உணவுச் சட்டம் 1983ன் பிரிவு 11ன் கீழ் 222 வளாகங்கள் அல்லது 3.16 சதவீத வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டு மொத்தம் 7,030 உணவு வளாகங்களும் ஆய்வு செய்யப்பட்டதாக டாக்டர் முஹம்மது ராட்ஸி கூறினார்.








