NATIONAL

மனிதவளத் துறையின் 32 திவேட் மையங்களில் 20,930 மாணவர்களுக்குப் பயிற்சி- அமைச்சர் சிவகுமார் தகவல்

20 செப்டெம்பர் 2023, 5:19 AM
மனிதவளத் துறையின் 32 திவேட் மையங்களில் 20,930 மாணவர்களுக்குப் பயிற்சி- அமைச்சர் சிவகுமார் தகவல்

கோலாலம்பூர், செப். 20- மனிதவள அமைச்சின் கீழ்

நாடு முழுவதிலும் உள்ள 32 திவேட் தொழில் திறன் பயிற்சி

மையங்களில் தற்போது 30,930 மாணவர்கள்

பயின்று வருகின்றனர் என்று மனிதவள

அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

பொதுவாக திவேட் தொழில் திறன் கல்வி

நிறுவனங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய

கால பயிற்சியை வழங்குகின்றன.

பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள்

தொழில் திறன் கல்வி நிலையத்தில்

நுழைவதற்கு தங்களை தயார்படுத்திக்

கொள்ள இந்த பயிற்சி பெரிதும் உதவுகிறது.

மனிதவளத் துறையின் 32 பயிற்சி நிறுவனங்களில்

20,930மாணவர்கள் பயில்கின்றனர்.

மாணவர்களின் திறமைகளை

மேம்படுத்தி தொழில் பாதையின் மூலம்

அவர்களின் வருமானத்தை அதிகரிக்க

வேண்டும் என்பதே இந்த தொழில் திறன்

கல்வி என்று நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட்

நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்

எழுப்பிய கேள்விக்கு மனித வள அமைச்சர்

சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.