பட்டர்வொர்த், செப் 15 - கடந்த ஆண்டு தனது மகளுக்கு எதிராக நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் நபர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இ-ஹெய்லிங் ஓட்டுநரான (63) அந்நபர், நீதிபதி நூர் ஐனி யூசோப் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் ஜாமினுக்கு மனு செய்தார்.
அந்நபர் மார்ச் மற்றும் ஜூன் 2022 க்கு இடையில் தனா லியாட், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு வீட்டில் 13 வயதான தனது மகளுக்கு எதிராக இக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடியும் விதிக்க வழிவகுக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை என்பதையும், அதே வீட்டில் வசிப்பவர் என்பதையும் கருத்தில் கொண்டு, துணை அரசு வழக்கறிஞர் வான் அமிரா ருசைனி வான் அப்துல் ரசாக் ஜாமீன் வழங்கவில்லை.
"ஜாமீன் அனுமதிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப் பட்டவரைத் தொந்தரவு செய்ய வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார். ஆஜராகாத குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்காத நீதிபதி, செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
- பெர்னாமா








