புத்ராஜெயா, செப்.15-
மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்
நடைமுறை இன்னும் கட்டுப்பாட்டில்
இருந்தாலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள்
பூஜ்ஜிய இலக்கை அரசாங்கம்
நிர்ணயித்துள்ளதாக மனிதவள அமைச்சர் வ.
சிவகுமார் தெரிவித்தார்.
கட்டாய உழைப்பு விவகாரத்தை அரசாங்கம்
தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றார்
அவர்.
கட்டாய உழைப்பை கையாள்வதில்
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை தொழிலாளர் சட்டம் 1955ஐ (திருத்தம் 2022)
திருத்துவதன் மூலம் காணலாம்.
இது தேசிய கட்டாய தொழிலாளர் செயல்
திட்டத்தை (2021-2025) தொடங்குவதுடன்
கட்டாய உழைப்பு தொடர்பான பிரிவு 90B
மூலம் புதிய விதிகளை உருவாக்கியுள்ளது
என்று அவர் சொன்னார்.
கட்டாய தொழிலாளர்கள் உட்பட பல
குற்றங்களுக்காக முதலாளிகளுக்கு எதிராக
1,321 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன.
1930 ஆம் ஆண்டின் கட்டாயத் தொழிலாளர்
மாநாட்டின் பிரிவு 2(1) இன் கீழ் உள்ள
விதிகளின் அடிப்படையில், எந்தவொரு
வடிவத்திலும், அனுமதியின்றியும் ஒரு நபரால்
செய்யப்படும் வேலை அல்லது
சேவையும் கட்டாய உழைப்பு என வரையறுக்கப்படுகிறது என்று
அவர் சுட்டிக் காட்டினார்.








