ANTARABANGSA

நான் பதவிக்கு வந்தால் ஐந்து அரசு துறைகளை மூடுவேன்-அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கூறுகிறார்

14 செப்டெம்பர் 2023, 6:55 AM
நான் பதவிக்கு வந்தால் ஐந்து அரசு துறைகளை மூடுவேன்-அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கூறுகிறார்

வாஷிங்டன், செப் 14- வரும் 2024 அதிபர் தேர்தலில் தாம் வெற்றி

பெற்றால் ஐந்து அரசுத் துறைகளை மூடுவதன் மூலம் அமெரிக்க கூட்டரசு

அரசின் அளவைக் குறைக்கவுள்ளதாக குடியரசுக் கட்சியின் அதிபர்

வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கூறுகிறார்.

எனது முதல் தவணையின் இறுதியில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை

75 விழுக்காடு குறைக்கப்படும் என்று அவர் கூறியதாக ஸ்புட்னிக் செய்தி

நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூடப்படும் அரசுத் துறைகளில் மத்திய புலனாய்வு மையம் (எஃப்.பி.ஐ.),

மது, புகையிலை, சுடும் ஆயுதங்கள், மருந்துகள் மையம் (ஏ.டி.எஃப்.)

கல்வித் துறை, அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் வேளாண்

உணவு மற்றும் ஊட்டச்சத்து சேவை துறை ஆகியவையும் அடங்கும்

என்று அவர் சொன்னார்.

இந்த அரசு துறைகளை மூடுவதற்கு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து

தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக விவேக்

குறிப்பிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற சோதனைகளில் தோல்வி கண்ட குறைந்தது 50

விழுக்காட்டு கூட்டரசு ஒழுங்கு முறைகளை மறுஆய்வு செய்யவும் தனது

நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

அந்த துறைகளுக்கு மாற்றாக வேறு அமைப்பு அமைக்கப்படாது. அதிலுள்ள

ஊழியர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றார் அவர்.

உதாரணத்திற்கு எஃப்.பி.ஐ.யில் உள்ள 35,000 பணியாளர்களில் 15,000 பேர்

அமெரிக்க மார்ஷெல் சேவை, நிதிக் குற்ற அமலாக்க வலையமைப்பு

மற்றும் மருந்து அமலாக்க நிர்வாகம் ஆகிய துறைகளில் சேர்க்கப்படுவர்

என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.