NATIONAL

பெரிக்காத்தான் ஆட்சியில் 12வது மலேசியத் திட்ட அமலாக்கம் தோல்வி

12 செப்டெம்பர் 2023, 10:35 AM
பெரிக்காத்தான் ஆட்சியில் 12வது மலேசியத் திட்ட அமலாக்கம் தோல்வி

கோலாலம்பூர், செப் 12 – பெரிக்கத்தான்

நேஷனல் ஆட்சியின் போது 12வது மலேசியத்

திட்டத்தின் (2021-2025) முதல் இரண்டு

ஆண்டுகள் தோல்வியடைந்து விட்டதாக

முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ

டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

அந்த திட்டத்தின் நோக்கங்களில் 31

சதவிகிதம் எட்டப்பட்ட போதிலும் கசிவுகள்

மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக

நாட்டின் தேசியக் கடன் 1.5 டிரில்லியன்

வெள்ளியாக உயர்வு கண்டது என கோல சிலாங்கூர் நாடாளுமன்ற

உறுப்பினருமான அவர் தெரிவித்தார் .

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில்

டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பிரதமராக

இருந்த காலத்தில் சுமார் 50,000 கோடி

வெள்ளி கூடுதலாகப் பெறப்பட்டதை அவர்

சுட்டிக்காட்டினார்.

12வது மலேசியத் திட்டத்தின் எஞ்சிய

காலப்பகுதியில் நாம் வெற்றியை

உறுதிசெய்ய விரும்பினால் இந்த கடன்

பிரச்சனையில் நாம் கவனம் செலுத்த

வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில்

12வது மலேசியத் திட்ட மத்திய கால

மதிப்பாய்வு மீதான விவாதத்தில் கலந்து

கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

12வது மலேசியத் திட்டத்தின் முதல் இரண்டு

ஆண்டுகளில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். அதிக கடன் காரணமாக வளர்ச்சியை இயக்க முடியாத ஒரு நிதி இடத்தில் நிற்கிறோம் என்றார் அவர்.

கடன் அதிகரிப்புக்கு வழிவகுத்த நிதிக்

கசிவுகளைக் கருத்தில் கொண்டு தேசிய நிதி

எதிர்ப்புக் குற்றவியல் மையத்தின்

செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய

அவசரத் தேவை நமக்கு உள்ளது என்று அவர்

மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த சில ஆண்டுகளில் அதிக வருமானம்

ஈட்டும் நாடாக உருவாகும் இலக்கை

அடைவதற்கான தற்போதைய அரசாங்கத்தின்

திட்டம் முந்தைய நிர்வாகங்களைப் போல்

வெறும் உதட்டளவில் இருக்காது என்று தாம்

நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.