ANTARABANGSA

மொரோக்கோ பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,854ஆக அதிகரிப்பு

12 செப்டெம்பர் 2023, 2:59 AM
மொரோக்கோ பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,854ஆக அதிகரிப்பு

ராபாட், செப் 12- மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட வலுவான

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,854ஆக உயர்ந்துள்ளதாக

அந்நாட்டின் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் மேலும் 2,562 பேர்

காயமடைந்துள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக

அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

இந்த நிலநடுக்கம் மர்ராகெச் நகருக்கு வட மேற்கே 75 கிலோ மீட்டர்

தொலைவிலும் 18.5 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக பாரம்பரிய இடமாக

யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்படுள்ள மர்ராகெச் நகரில் மிகவும்

மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்கும் பணியில்

அந்நாட்டின் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது வரை ஸ்பெய்ன், இங்கிலாந்து, கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய

நாடுகளிடமிருந்து உதவிக்கான வாக்குறுதிகளை மொரோக்கோ

பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக கருவூலம் மற்றும்

மொரோக்கோ வங்கியின் வாயிலாக சிறப்பு வங்கிக் கணக்கை அந்நாட்டு

அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கியது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.