கோலாலம்பூர், செப் 11: 12வது மலேசியத் திட்டத்தின் (KSP RMK12) அரையாண்டு
மதிப்பாய்வு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2021-2025 காலத்திற்கான
தேசிய வளர்ச்சி நிலை மற்றும் மக்களின் சமூகப் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு
விஷயங்கள் முன்வைக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். காலை 10 மணிக்கு நான் 12வது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளேன் என்று
நிதியமைச்சர் அன்வார் தெரிவித்தார்.
இன்று காலை தொடங்கிய 12வது மலேசியத் திட்டத்தின் தாக்கல் நாளை தொடங்கி
மூன்று நாட்களுக்குப் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்துடன் தொடரும். அதைத்
தொடர்ந்து செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தொடர்புடைய
அமைச்சகங்களின் பதில்களின் அமர்வு இடம்பெறும்.
12வது மலேசியத் திட்டத்தின் தாக்கல் நாடாளுமன்றத்தின் யூடியூப் மற்றும் பல
தொலைக்காட்சி சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
– பெர்னாமா








