கோலாலம்பூர், ஆக 28 - மலேசிய நிறுவன
ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) மூலம்
அரசாங்கம் வழங்கும் இலவச வர்த்தகப்
பதிவுத் திட்ட வாய்ப்புகளை முழுமையாகப்
பயன்படுத்திக் கொள்ள பி40 வர்த்தகர்கள்
மற்றும் தொழில்முனைவோர்
ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஜனவரி 1
முதல் ஜூலை 31 பதிவு செய்த வரை வணிக
நிறுவனங்களின் எண்ணிக்கை 26,410
ஆகும் என்று இடைக்கால உள்நாட்டு
வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சர் டத்தோ அம்ரிசான் முகமது அலி
தெரிவித்தார்.
இதற்கிடையில், மீதமுள்ள 60 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள வணிக பதிவு மானிய
ஒதுக்கீடுகளின் வழி 80,000 க்கும் மேற்பட்ட
தொழில்முனைவோர் பயன் பெற முடியும்
என்று அவர் ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்.
பி40 தொழில் முனைவோர் மற்றும் முழுநேர
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உயர்கல்வி
நிறுவன மாணவர்கள் தங்கள் வர்த்தகத்தை
1956ஆம் ஆண்டு வர்த்தகப் பதிவுச்
சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான
வாய்ப்பினை வழங்கும் நோக்கில்
மலேசிய நிறுவன ஆணையம் இந்த
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தவிர, பகாங்கில் 400க்கும் மேற்பட்ட
வணிகர்கள் மற்றும் சிலாங்கூரில் 1,000
வணிகர்கள் பங்கேற்கும்
தொழில்முனைவோர் வழிகாட்டுதல்
நிகழ்ச்சியின் இரண்டு தொடர்களை
எஸ்.எஸ்.எம். இவ்வாண்டு
ஏற்பாடுசெய்துள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.








