ALAM SEKITAR & CUACA

உரிமம் இல்லாமல் இயங்கிய இரண்டு கரோஹோக்கே மையங்களை மீது கிள்ளான் நகராண்மை கழகம் நடவடிக்கை

6 ஜூன் 2023, 1:42 PM
உரிமம் இல்லாமல் இயங்கிய இரண்டு கரோஹோக்கே மையங்களை மீது கிள்ளான் நகராண்மை கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 6: கடந்த சனிக்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் உரிமம் இல்லாமல் இயங்கியதற்காகப் புலாவ் கெத்தாம், போர்ட் கிள்ளானில் உள்ள இரண்டு கரோஹோக்கே மையங்களை கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) மூடியது.

கிள்ளான் நகராண்மை கழக துணைத் தலைவர் எல்யா மரினி டர்மின் மற்றும் போர்ட் கிள்ளான் பிராந்தியம் ஒன்றின் மரின் காவல்துறை படை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜம்ரி சான் ஆகியோர் தலைமையில் இரவு 10 மணிக்கு இச்சோதனை தொடங்கியது.

இந்த சோதனையின் போது புலாவ் கெத்தாம் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிள்ளான் நகராண்மை கழக அமலாக்க அதிகாரிகளும் இருந்தனர் என எல்யா மரினி கூறினார்.

"உள்ளூர்வாசிகளால் நடத்தப்படும் அந்த இரண்டும், உரிமம் இல்லாமல் இயங்கிய இரண்டு கரோஹோக்கே மையங்களை மீது கிள்ளான் நகராண்மை கழகம் நடவடிக்கை

ஒலிபெருக்கிகள், கரோஹோக்கே பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1995 பொழுதுபோக்கு (1998 மற்றும் 2001 இல் திருத்தப்பட்டது) மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் தொடர்பான சட்டப் பிரிவு 6(1) இன் கீழ் இந்த மையங்கள் கைப்பற்றப்பட்டதாக எல்யா மரினி குறிப்பிட்டார்.

மையங்களும் உரிமம் பெறாதவை என்பதை கண்டறிந்த பிறகு, பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.