NATIONAL

இணையத்தின் வழி  ஆடைகள் விற்பதாக ஏமாற்றிய கணவன்-மனைவி கைது

15 மே 2023, 9:46 AM
இணையத்தின் வழி  ஆடைகள் விற்பதாக ஏமாற்றிய கணவன்-மனைவி கைது

புத்ராஜெயா, மே 15: கடந்த மே 11 அன்று, பேராக் அலுவலகத்தில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (கேபிடிஎன்) மஞ்சோங் அலுவலகத்தில் இணையத்தில் ஆடைகள் விற்பதாக ஏமாற்றிய கணவன்-மனைவி  கைது செய்யப்பட்டனர்.

ஹரி ராயா ஐடில்பித்ரியை முன்னிட்டு ஆடைகள் விற்பனை செய்வது தொடர்பாகப் பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் 40 வயதுடைய உள்ளூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக அமலாக்கத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.

முகநூலில் பாஜு கூரோங் விற்பதாக விளம்பரம் செய்ததன் மூலம் புகார்தாரர் ஒரு ஜோடி பாஜு கூரோங் வாங்க ஆர்டர் செய்து ஏமாற்றப்பட்டதாக செத்தியவான், பேராக்கில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப் பட்டது என்று அவர் கூறினார்.

"எனினும், அந்த ஆடை புகார் அளிக்கப்பட்ட நாள் வரை புகார்தாரருக்குக் கிடைக்கவில்லை," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விற்பனை மோசடி தொடர்பாக நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 100 புகார்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் பெற்றுள்ளது என்று அஸ்மான் கூறினார்.

மேலும் விசாரணையில் முகநூலில் விளம்பரம் செய்ததன் மூலம் நாடு முழுவதும் நூறாயிரக்கணக்கான ரிங்கிட் தங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த மோசடி தம்பதியினர் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது என்றார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1999 [சட்டம் 599] இன் கீழ் விளம்பரம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான விசாரணைக்கு ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அஸ்மான் கூறினார்.

பிரிவு 4, பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் 2001 (AMLATFPUAA 2001) [சட்டம் 613] இன் கீழ் விசாரணை நடத்தப்படும், என்றார்.

இணையச் சட்டவிரோத நடவடிக்கையில் பெறப்பட்ட வருமானம் அல்லது சொத்தை கண்டறிதல், முடக்குதல், பறிமுதல் செய்தல் மற்றும் அபகரிக்கும் நிலை வரை பண மோசடி குற்றத்துடன் தொடர்புடையது சட்டம் 613.

அந்த இரண்டு நபர்களும் மே 12 முதல் இன்று வரை நான்கு நாள் காவலில் வைக்கும் விண்ணப்பத்திற்கு மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வரப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 8,700 ரிங்கிட் மதிப்பிலான மின்னணு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.