துருக்கியில் புதிதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்வு

22 பிப்ரவரி 2023, 4:15 AM
துருக்கியில் புதிதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்வு

அங்காரா, பிப் 22- தென் துருக்கியின் ஹடாய் மாநிலத்தில் திங்கள்கிழமை புதிதாக

ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் இறந்துள்ள வேளையில் 294 பேர்

காயமடைந்தனர் என்று சின்ஹுவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 6ஆம் தேதி அதே பகுதியில் 41,000க்கும் அதிகமான மக்களைப் பலி கொண்ட

வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் முறையே 6.4 மற்றும் 5.8 அளவுள்ள இரண்டு நிலநடுக்கங்கள் கடந்த திங்களன்று

ஏற்பட்டன.

முதல் நிலநடுக்கம்  டெஃப்னே மாவட்டத்தை உள்ளூர் நேரப்படி இரவு 8:04 மணிக்கு

உலுக்கியது, அதைத் தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகு சமந்தாக் மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை

ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.