பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

30 ஜனவரி 2023, 9:56 AM
பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், ஜன 30: தொழில் முனைவோர் திட்டம் 2.0 மற்றும் 3.0 கீழ் RM87,500 ஊக்கத்தொகையை பெறுவதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (Socso) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 5 குற்றச்சாட்டுகளின் பேரில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

35 வயதான ரேமண்ட் சிம், 9 மார்ச் 2021 மற்றும் 11 நவம்பர் 2021 க்கு இடையில் பெட்டாலிங் ஜெயா மற்றும் கிளாங்கில் உள்ள இரண்டு  சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (Socso)  அலுவலகக் கிளைகளில் அவர் செய்ததாகக் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

பணியமர்த்தல் ஊக்கத் திட்டத்திற்கான பணியாளர் சரிபார்ப்பு படிவத்தில் பொய்யான தகவலைக் கொண்ட ஆவணத்தை சமர்ப்பித்ததாகச் சிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் பட்டியலில் உள்ள ஊழியர்களின் பெயர்களைக் கொண்ட நபர்களை நிறுவனம் பணியமர்த்த வில்லை.

இந்த குற்றச்சாட்டு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 யின் பிரிவு 18 இன் கீழ் உள்ளது மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதே சட்டத்தின் பிரிவு 24 (2) இன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

முன்னதாக, ஊழல் எதிர்ப்பு ஆணையம் வழக்கறிஞரான முகமட் அலிஃப் ஷாஹருஜாமான், குற்றம் சாட்டப்பட்ட நபர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் மாதத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள ஊழல் எதிர்ப்பு ஆணைய அலுவலகத்தில் வருகை பதிவு செய்ய வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் RM50,000 ஜாமீன் வழங்கினார்.

இருப்பினும், வழக்கறிஞர் ரூபன் ஓங் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வாதிட்டார் மற்றும் அவரது தரப்பினரின் உடல்நிலை சரியில்லாத குழந்தையின் மருத்துவ செலவை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் RM7,000 குறைந்த ஜாமீனுக்கு விண்ணப்பித்தார்.

நீதிபதி ரோசிலா சாலே பின்னர் ஒரு உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் நிர்ணயித்தார் மற்றும் அனைத்து வழக்குத் தொடரின் கோரிக்கைகளையும் அனுமதித்தார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த ஜனவரி 26 ஆம் நாள் அன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், RM153,200 மதிப்புடைய அதே திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஏழு குற்றச்சாட்டுகளை சிம் ஒப்புக்கொள்ளவில்லை.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.