சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் (INSAN) ஒவ்வொரு மாதமும் 500 பேரை பதிய இலக்கு

30 ஜனவரி 2023, 6:50 AM
சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் (INSAN) ஒவ்வொரு மாதமும் 500 பேரை பதிய இலக்கு

கிள்ளான், ஜன 30: செந்தோசா மாநில சட்டமன்றத்தை (DUN) சுற்றியுள்ள 500 குடியிருப்பாளர்களை ஒவ்வொரு மாதமும் சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் (INSAN) பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது..

அதன் பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ் கூறுகையில், இலவசக் குழு தனிநபர் விபத்துக் காப்பீட்டுக் கொள்கை குறித்து பொதுமக்களுக்கு அறிமுகம் செய்வதைத் தனது தரப்பு தீவிரப்படுத்தும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1 மாதக் குழந்தை முதல் 80 வயது வரையிலானவர்கள் வரை பங்கேற்கலாம்.

"அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் இந்த திட்டத்தை மேலும் விளம்பரப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், ஏனெனில் இது மக்களுக்கு மிகவும் நல்ல ஒரு திட்டம்," என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள செந்தோசா மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை மைய மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட பல்லினச் சமூகத்தினர் கலந்து கொண்ட பொங்கல் பெர்பாடுவான் செந்தோசா கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

குடியிருப்பாளர்கள் இணையத்தின் வழி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க உதவுவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தனது தரப்பு செயல்படும் என்றும் குணராஜ் கூறினார்.

இன்சான் என்பது ஆறு மில்லியன் சிலாங்கூர் குடிமக்களுக்கு மாநில அரசு நிறுவனமான சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் செயல்படுத்தப்படும் குழு பொதுக் காப்பீடு திட்டம் ஆகும்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் அடையாள அட்டை அல்லது சிலாங்கூரில் முகவரியுடன் மை கிட் வைத்திருப்பவர்கள், சிலாங்கூர் குறியீட்டைக் கொண்ட அடையாள அட்டை அல்லது சிலாங்கூரில் வாக்காளராக இருத்தல் வேண்டும்.

``AppStore``, ``Google Play`` அல்லது ``Huawei ஆப் கேலரியின்`` வழி `Wavpay`` பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு programinsan.com ஐப் பார்வையிடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.