HEALTH

101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

25 ஜனவரி 2023, 4:33 AM
101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

ஷா ஆலம், ஜன 25: 101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளது, அவற்றில் ஒன்று அந்நிய நாட்டினரால் ஏற்பட்ட சம்பவம் ஆகும். மொத்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,035,073 ஆக உள்ளது.

``KKM Now`` போர்ட்டலில் உள்ள மலேசியச் சுகாதார அமைச்சகத்தின் (KKM) தரவுகளின் அடிப்படையில், செவ்வாயன்று இறப்புகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.

மலேசியாவில் கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,932 ஆக உள்ளது என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனால் நாட்டில் தொற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,988,143 ஆக உள்ளது.

இதற்கிடையில், கோவிட் -19 இன் தற்போதைய சம்பவங்கள் 9,998 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில் 9,635 அல்லது 96.4 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஆவர்.

கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) எந்த நோயாளிகளும் வைக்கப்படவில்லை, அதே நேரத்தில் 351 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.