கோலாலம்பூர், டிச 30- புக்கிட் பெருந்தோங்கில் உள்ள மன நோயாளிகள்
காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த மன நோயாளி ஒருவர் கடந்த
செவ்வாய்க் கிழமை மரணமடைந்தது தொடர்பில் அந்நிய பிரஜை ஒருவரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த காப்பகத்தின் பணியாளரான 33 வயது ஆடவர் நேற்று
விடியற்காலை 1.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுஃபியான் அப்துல்லா
கூறினார்.
வயதுடைய நபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடந்தது தொடர்பாக
அதன் பணியாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் அந்த
சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நபர் உடனடியாக ராசா சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்,
கை மற்றும் கால்களில் வீக்கம் காணப்பட்டதாகவும் இச் சம்பவத்திற்கான
காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.


