HEALTH

நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

30 நவம்பர் 2022, 4:42 AM
நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று  1,672  புதிதாக கோவிட்-19 சம்பவங்கள்  உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29  நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மிக அதிகமாக  619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில்  கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை  36,667 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று 2,722  கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன்

சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

-சிலாங்கூர்: 619

-கோலாலம்பூர்: 134

-கெடா: 133

-சபா: 103

கிளந்தான்: 77

-மலாக்கா: 89

-பினாங்கு: 81

-சரவாக்: 80

-பேராக்: 66

-பகாங்: 46

-நெகிரி செம்பிலான்: 84

-திரெங்கானு: 57

-புத்ராஜெயா: 52

-ஜோகூர்: 39

-லாபுவான்: 9

-பெர்லிஸ்: 3

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.