ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள எட்டு பகுதிகளில் உள்ள ஆறுகள் அபாய அளவை தாண்டி உள்ளன

17 நவம்பர் 2022, 6:22 AM
சிலாங்கூரில் உள்ள எட்டு பகுதிகளில் உள்ள ஆறுகள் அபாய அளவை தாண்டி உள்ளன

ஷா ஆலம், நவம்பர் 17: சிலாங்கூரில் உள்ள எட்டு பகுதிகளை உள்ளடக்கிய நதிகளின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ வெள்ளத் தகவல் இணையதளம் காலை 8.15 மணி நிலவரப்படி தெரிவித்துள்ளது.

https://publicinfobanjir.water.gov.my/ இன் தகவலின் அடிப்படையில் பெக்கன் பாங்கி லாமாவில் உள்ள செமினி நதி 17.87 மீட்டர் மட்டத்தில் உள்ளது, கிள்ளானில் பெக்கன் மேருவில் உள்ள பிஞ்சாய் நதி (4.28 மீட்டர்), தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள கிள்ளான் நதி (5.37 மீட்டர்) மற்றும் தாமான் டேசா கெமுனிங்கில் உள்ள சுங்கை ராசாவ் (3.74 மீட்டர்).

மேலும், புக்கிட் சங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் (4.64 மீட்டர்), டிங்கிலில் உள்ள சுங்கை லங்காட் (8.16 மீட்டர்), ஜெண்டராம் ஹிலிரில் உள்ள சுங்கை லங்காட் (13.25 மீட்டர்) மற்றும் கம்போங் சாலாக் திங்கியில் உள்ள சுங்கை லாபு (9.9 மீட்டர்). கம்போங் ஜாவாவில் உள்ள சுங்கை காண்டிஸ் (4.93 மீட்டர்), ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை சிலாங்கூர் (7.58 மீட்டர்) மற்றும் கம்போங் புடிமானில் உள்ள சுங்கை பாகுல் (7.97 மீட்டர்) ஆகியவை எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.