ECONOMY

நான்கு வாக்குச்சாவடிகள் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படும், வாக்காளர்கள் காலை நேரத்தில் வாக்களிக்க அறிவுறுத்து

15 நவம்பர் 2022, 9:24 AM
நான்கு வாக்குச்சாவடிகள் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படும், வாக்காளர்கள் காலை நேரத்தில் வாக்களிக்க அறிவுறுத்து

ஷா ஆலம், 15 நவம்பர்: சிலாங்கூரில் நான்கு வாக்குப்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும், மற்ற மூன்று வாக்குப்பதிவு மையங்கள் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தேர்தல் ஆணையம் (SPR) தெரிவித்துள்ளது.

ஸ்ரீ செம்பாக்கா தேசிய பள்ளி, புக்கிட் ஃப்ரேசர் தேசிய வகை சீன பள்ளி, பாலாய் ராயா லுபுக் ஜெயா மற்றும் தேசிய வகை புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடையும்.

தேசிய வகை சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, செகோலா கெபாங்சான் ஸ்ரீ கம்புட் தஞ்சோங் காராங், தேசிய வகை மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய வகை சிலாங்கூர் ரிவர் தமிழ்ப்பள்ளி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்களிப்புக்கு  திறந்திருக்கும்.

எனவே, வாக்காளர்கள் ஏமாற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே வாக்களிக்கச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்,  தவறினால் நாட்டு மக்கள் தங்கள் கடமையிலிருந்து விலகிய தாகும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.