உலு சிலாங்கூர், நவ 10: உலு சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பு, பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
"உலு சிலாங்கூரில் 5,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, ஆனால் அவைகளில் பெரும்பாலும் வெளிநாட்டினர் வேலை செய்கிறார்கள். மலேசிய இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற சாக்குப்போக்கு கூறப்பட்டாலும் நமது இளைஞர்களுக்கு தகுதியான வேலைகள் வழங்கப்பட வில்லை என்றார் அவர்.
"சரியான வழிகாட்டுதல், சரியான பயிற்சி கொடுக்கப்பட்டால், நம் இளைஞர்கள் சோம்பேறிகள் என்று சாட வேண்டிய அவசியம் இருக்காது என்றார் அவர். இங்குள்ள சுங்கை சோ தேர்தல் இயக்க அறையில் சந்தித்த போது கூறினார்.
மேலும், இளைஞர்கள் சார்ந்த கிரெடிட் கார்டுகளால் திவாலாகும் பிரச்சனையை அப்படியே விட்டு விடக் கூடாது என்றார் டாக்டர் சத்யா.
சம்பந்தப்பட்ட குழுவுக்கு நிதி மேலாண்மை அறிவை வழங்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
“எனக்கு கிரெடிட் கார்டு கொடுத்தார்கள், இப்போது நான் திவாலாகிவிட்டேன் என்று சொன்ன ஒரு இளைஞர் குழுவை நான் ஒரு முறை சந்தித்தேன். இது யாருடைய தவறு? இளைஞர்களின் தவறா? கிரெடிட் கார்டுகளை எப்படி பயன்படுத்துவது என்று இளைஞர்களுக்குத் தெரியாது.
“இளைஞர்கள் நிதி அறிவு திறன் கொண்டவர்களாக இருக்க, எதற்கு கடன் வாங்க வேண்டும், எதற்கு கடன் வாங்க கூடாது என்பதை வழிகாட்டும் அமைப்பை உருவாக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, ”என்று அவர் கூறினார்.
2008 ஆம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் சத்தியா, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆறு முனை போட்டியை எதிர்கொள்கிறார்.


